இந்தியாவை வரும் 2020ம் ஆண்டுக்குள் வலலரசாக்க வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் நோக்கத்தோடு இந்தியா 2020 என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள்ளார். அதில், வல்லரசாகவும், முன்னேறிய நாடாகவும் இந்தியா மாற செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டுள்ளார். ஒரு நாடு சிறந்த, வலிமையான நாடாக மாற வேண்டுமென்றால், கீழ்க்கண்ட துறைகளில் தன்னிறைவு காண வேண்டும் என வரையறுக்கிறார்.
1. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல்
2. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம்
3. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்
4. அடிப்படை கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம், சீரான சாலை போக்குவரத்து.
5. மிகமுக்கிய உயர் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு.
அப்துல் கலாம் டுவிட்டர் சமூக இணைய தளத்தில் தனது நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் மற்றும் தனது கருத்துக்களை டுவிட் செய்வது வழக்கம். அவரது டுவிட்களை 14 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர். ஷில்லாங்கில் நடைபெறும் ஐ.ஐ.எம். விழாவில் கலந்து கொள்ள புறப்படுவதாக அவர் நேற்று காலை கடைசியாக டுவிட் செய்திருந்தார்.
மதுரையை கவர்ந்த கலாம்
ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் அப்துல் கலாம் மதுரைக்கு அடிக்கடி வந்து பள்ளி, கல்லூரி மற்றும் விழாக்களில் பங்கேற்றார். கடைசியாக, கடந்த 18ம் தேதி மதுரைக்கு வந்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க விழாவில் பேசினார். அப்போது ‘இயற்கை விவசாய முறை நன்கு வளர வேண்டும். இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும். கிராமங்களில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறி அங்காடிகள் திறக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
குடும்பத்தின் கடைக்குட்டி
அப்துல் கலாம் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளையாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 4 பேர். உடன் பிறந்த இரண்டு அண்ணன்கள், ஒரு அக்காள் ஏற்கனவே இறந்துவிட்டனர். மூத்த அண்ணன் முகமது முத்துமீரான் மரைக்காயர் (92) உள்ளார். ஐந்தாவதாக பிறந்த அப்துல் கலாம் தற்போது இறந்துவிட்டார்.
No comments:
Post a Comment