Sunday, 10 June 2018

17 வயதில் மாவட்ட ஆட்சியர் ஆன மாணவி..! இந்தியாவில் முதல் முறையாக

17 வயதில் மாவட்ட ஆட்சியர் ஆன மாணவி..! இந்தியாவில் முதல் முறையாக..
Seithi Puna 10 Jun. 2018 11:07
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 12-ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை மாவட்ட ஆட்சியராக நியமித்து, அம்மாணவியின் மாவட்ட நிர்வாகம் கொண்டாடியுள்ளது.
அந்த மாணவியின் மாவட்ட ஆட்சியர் கனவை ஒரு நொடியில் நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகத்தை அம்மாநிலமே பாராட்டி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் பெரும்பாலான மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுன் மாவட்டத்தைச் சேர்ந்த ''வந்தனா குமாரி'' என்ற மாணவி முதலிடம் பிடித்தார். இதனை எடுத்து செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுத்தனர், அதில் அவர் கூறும் பொது, ''நான் சிறு வயது முதலே மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்தேன். அதனாலேயே என்னால் முதல் மதிப்பெண் எடுக்க முடிந்ததாக'' தெரிவித்தார்.
இந்நிலையில், அம்மாணவியின் பேட்டியை பார்த்த ஜுன்ஜுன் மாவட்டத்தின், மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாணவி வந்தனா குமாரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, அம்மாணவியை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமரவைத்து கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்ததாவது, ''நம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி வந்தனா குமரியின் மாவட்ட ஆட்சியர் கனவை தெரிவித்திருந்தார். அவரின் இந்த உயர்ந்த கனவை ஊக்குவிக்க முடிவு செய்து. அவரை ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக என் இருக்கையில் அமர வைத்து, மாவட்ட அலுவலக பணிகளை மேற்கொள்ள வைத்துள்ளேன். இதனால் அம்மாணவி இன்னும் உத்வேகத்துடன் தனது கனவை நிறைவேற்ற செயல்படுவார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year