Saturday, 24 March 2018

2015 சென்னையின் எப்சி அணி,

2015-ம் ஆண்டு சாம்பியனான சென்னையின் எப்சி அணி, இந்த சீசனில் லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. அதே நேரத்தில் அறிமுக அணியான பெங்களூரு எப்.சி., லீக் சுற்றில் 18 ஆட்டங்களில் 13-ல் வெற்றிகளை குவித்து முதலிடம் பெற்றது.

சென்னை, பெங்களூரு அணிகள் ஏற்கெனவே லீக் போட்டிகளின்போது இரண்டு ஆட்டங்களில் மோதியுள்ளன. ஒன்றில் பெங்களூரு எப்.சி.யும் (3-1), மற்றொன்றில் சென்னையின் எப்.சி.யும் (2-1) வெற்றி பெற்று இருந்தன.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இரு அணி வீரர்களும் கோப்பையை வெல்லும் நோக்கில் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் பெங்களூரு அணி வீரர் சேத்ரி கோலடித்தார். இதையடுத்து அபாரமாக விளையாடிய சென்னை அணி வீரர் மெயில்சன் 17-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டது.

தொடர்ந்து சென்னை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 45-வது நிமிடத்தில் சென்னை வீரர் மெயில்சன் மேலும் ஒரு கோல் போட்டு அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தார். முதல் பாதியின்போது சென்னை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியின்போது 67-வது நிமிடத்தில் சென்னை வீரர் அகஸ்டோ ஒரு கோலடித்தார். இதனால் சென்னை அணி 3-1 என முன்னிலையை அதிகப்படுத்தியது. கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு ஒரு கோலடித்தார். இறுதியில் சென்னை 3-2 என பட்டம் வென்றது. சென்னை அணிக்கு ரூ.8 கோடியும், 2-ம் இடம் பெற்ற பெங்களூரு அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாகக் கிடைத்தது.

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year